Haiku kavithaigal

Two-Line Quote with Symbols

"ஆயிரம் வலிகள் நீ அடைந்தாலும்.
உன் இலக்கில் குறியாக இரு."

- தஞ்சை சிவா

"மெளனமாக காத்து இரு.
இலக்கை எட்டிய பிறகு பேசு."

- தஞ்சை சிவா

"நினைவுகள் எப்போதும் அழகானது .
அதை பத்திரமாக பட்டயம் செய்து வைத்துக்கொள்."

- தஞ்சை சிவா

"நேரம் என்பது உயிர் போன்றது .
உன் உயிரை யாருக்கும் விட்டு கொடுக்காதே"

- தஞ்சை சிவா

"காத்திருந்து பெறும் எந்த பொருளும்.
உன் மீது காதலை வெளிப்படுத்தும் மறவதே"

- தஞ்சை சிவா

"நதியில் நீந்தும் மீனை பார் .
வழி தெரியாத நதியில் தன் வழித்தடம் பதித்த அழகை பார்"

- தஞ்சை சிவா

"எல்லோரும் நல்லவர்கள் தான் .
நீ அவர்களிடம் கையேந்தும் வரை"

- தஞ்சை சிவா

"தினமும் வாழ்வில் போராடும் ஏழையும் .
கடவுள் தான்"

- தஞ்சை சிவா

"அவள் மறக்க சொல்கிறாள்
மனம் அவளை நினைக்க சொல்கிறது"

- தஞ்சை சிவா

"எல்லோரும் ஒரு நாள் மறைந்து போவோம்
அதற்கு முன் சில நினைவுகளை பகிர்ந்து செல்வோம்"

- தஞ்சை சிவா

"பூக்கடை முழுவதும் வாசம் தான்
அதை விற்பவள் வாழ்வில் மட்டும் வாசம் இல்லை"

- தஞ்சை சிவா

"தெருக்கள் தோறும் தோரணம்
அதை வேடிக்கை பார்க்க வீதிக்கு வரும் சாமி"

- தஞ்சை சிவா

"ஆயிரம் வலிகள் இருந்தாலும்
அவள் முகமே வலி தீர்க்கும் மருந்து"

- தஞ்சை சிவா

"எனக்காக யாரும் இல்லை
அவளுக்காக நான் இருக்கிறேன்"

- தஞ்சை சிவா

"தீர்க்க முடியாத பிரச்சினைகள் கூட
அவள் கடைவிழியில் கரைந்து ஓடும்"

- தஞ்சை சிவா

"விலிகளை மட்டுமே பார்த்து வளர்ந்தவள்
இன்று தான் முதல் முறை சிரிக்கிறாள்"

- தஞ்சை சிவா

"அவள் கண்ணுக்குழி மட்டும் ஏன்
காந்தம் போல் ஈர்க்கிறது "

- தஞ்சை சிவா

"அவளுக்கும் எனக்கும் ஆன பந்தம்
பாவாடைக்கும் நாடாவுக்கம் இருக்கும் உறவு போன்றது"

- தஞ்சை சிவா

"அவள் மெளனம் மட்டும் ஏன்
என் இதயத்தை சாகடிக்கிறது"

- தஞ்சை சிவா

"தெருக்கள் தோறும் தோரணம்
அதை வேடிக்கை பார்க்க வீதிக்கு வரும் சாமி"

- தஞ்சை சிவா

"தெருக்கள் தோறும் ஒரே சலசலப்பு
அவள் தோகை விரித்து நடணமாடும் கதகதப்பு"

- தஞ்சை சிவா

"யாரும் பார்க்காத காட்சி
அவளுக்கு எனக்குமே சாட்சி"

- தஞ்சை சிவா

"அவள் அழகு மிதக்கும் நிலவைவிட அழகு
மந்தாரை பூவு ஒன்னு மனசுக்குள் பூத்த நிகழ்வு"

- தஞ்சை சிவா

"அவள் கருப்பட்டியாய் இனிக்கிறாள்
அவளிடம் நான் நித்தம் தேனீர் அருந்துகிறேன்"

- தஞ்சை சிவா

"நெஞ்சு முடியில் கொஞ்சி பேசும் இளம் தளிரே
மிஞ்சி மிதிச்சி மனைவியாய் வருவது எப்போது "

- தஞ்சை சிவா

"காய்ந்த ஓடையில் மழைச்சாரல்
அவள் இதழ் பொழிந்தது பெரும் மழை"

- தஞ்சை சிவா

"கண்ணீர் துதும்புதடி
கண்ணே உன் கருவரை கதை கேட்டு"

- தஞ்சை சிவா

"ஒருநாள் கனவாகி போனேதே
அவள் ஒரு நிமிட பார்வை"

- தஞ்சை சிவா

"பூக்களே வாருங்கள்
என்னவள் பொன் சிரிப்பை பாருங்கள்"

- தஞ்சை சிவா

"தித்திக்கும் தேன்மொழி உன் வாசம் போதை ஏற்றுதடி
மயங்கிடக்கும் எனக்கு உன் மடியில் இடம் தருவாயா"

- தஞ்சை சிவா

No comments:

Powered by Blogger.