ஊர்
உன்னை தவிர்த்த போதும்
உறவுகள்
உன்னை வெறுத்த போதும்
நீ
ஒரு போதும் கலங்காதே
அவர்கள்
யாரும் உனக்கானவர் இல்லை.
இங்கே
ஒவ்வொரு நகர்வும் ஏதோ ஒரு தேவையை எண்ணியே நகர்கிறது.
தேவைக்காக பேசும்
உறவுகளின் பாசம் உனக்கு எப்போதும் விஷம் என்பதை நீ ஒருபோதும் மறவதே.
உன்
வாழ்வில் நீ உன் நம்பிக்கை மட்டுமே நம்பு.
அந்த
நம்பிக்கை தரும் இனிய பாதையில் இப்போதே நீ உன் வாழ்வை துவங்கு.
வெற்றி
என்பது இங்கும் ஏதும் இல்லை
தேல்வி
என்பது இங்கும் ஏதும் இல்லை
வெற்றி தோல்வி
இரண்டும் ஒன்று தான்
அந்தக் கடவுளுக்கே இது பொருந்தும்.
எந்த உணர்ச்சியும்
உன் பார்வையில் ஒரே மாதிரி இருந்தால்
உன் வாழ்வில் நீ
வெற்றி தோல்வி பற்றி
சிந்திக்கவும் தேவையில்லை.
இன்றே
நடைபோடு
வெற்றியில் நடைப்போடு.
நன்றி வணக்கம்.
No comments: