காதல் ஹைக்கூ கவிதைகள் || Love Haiku kavithaigal

Haiku Poems by Admin_Siva | Tamil Quotes Blog tamilquotes - Home

tamilquotes

ஹைக்கூ கவிதைகள்

Introduction:

தமிழ் மொழியின் தனி சிறப்பு " கவிதைகள்" தான். கவிதைகள் என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும், அதுவும் ஹைக்கூ தமிழ் கவிதைகள் என்றால் நமக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன? கவிதையை மீது காதல் கொண்டு www.tamilquotes.blog வலைத்தளத்திற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வருக வருக என்று வரவேற்கிறோம். :

Admin_Siva
July 6, 2024

பேச நேரம் இன்றி தவித்த காலம் சென்று பேசாமல் இருக்க இப்போது காலம் தவிக்கிறது.
- கவிஞர் சிவா

தலைப்பு: காலம் கவிதை

அவள் தீட்டும் ஓவியங்கள் ஒருமுறை என்னோடு பேசும் என்ற ஏக்கத்தோடு பத்திரமாக பதிக்கி வைக்கிறேன் என் வாழ்க்கை எனும் புத்தகத்தில்.
- கவிஞர் சிவா

தலைப்பு: அவளும் புத்தகமும் கவிதை

ரகசியங்கள் ஏதும் இல்லை ஒர் உடல் ஈருடல் ஆனபிறகு வேர்வை துளிகளே எங்கள் வாழ்வின் அரண்.
- கவிஞர் சிவா

தலைப்பு: அரண் கவிதை

நிம்மதியாய் உறங்கும் அவள் நினைவுகள் பாடல்கள் கேட்கும் போது மட்டுமே கண்விழிக்கிறது என் இதயத்தில்❣️
- கவிஞர் சிவா

தலைப்பு: நினைவு கவிதை

தீண்டப்படாத சித்திரை நிலவு ஊசிகள் காத்து நிற்கும் பெட்டகம் ஊத்து நீர் பனிக்கட்டி உறைந்து கிடக்கும் இருள் சூழ்ந்த கிணறு உஷ்ணம் தணிய ஒருமுறை மூழ்கி எழ துடிக்கும் முக்கோண தூவாரம்.
- கவிஞர் சிவா

தலைப்பு: வாலிப வயது கவிதை

பசுமை தரும் மகிழ்ச்சியை பருவம் ஏய்தவள் தருகிறாள் அவள் உள்ளே மறைந்து இருக்கும் அழகு ரகசியம் விடுதலை கேட்கிறது. .
- கவிஞர் சிவா

தலைப்பு: ரகசிய கவிதை

அண்ணக்கொடி மயில் தோகை மாதத்தின் மூன்று நாள் முழு விடுமுறை கேட்டது சிறிய சிறகுகள் புதுப்பிக்க வேண்டுமாம்.
- கவிஞர் சிவா

தலைப்பு: புதுப்பித்தல் கவிதை

பட்டாம்பூச்சி தான் அழகு என்று நினைத்து இருந்தேன் அவள் ஆடைகள் கலைந்த பிறகு நான் உணர்ந்தேன் இவளே இவ்வுலகின் அதிசய அழகு முகப்பு அவள் தோரணை மூன்று முறை முயற்சி செய்து அவள் அழகை கண்டதும் மூச்சுவிட முடியாது மூழ்கி போனேன் அவள் மொத்த அழகையும் கண்ட போது வசீகரிக்கும் வனப்பு பரிதவிக்கும் மனசு மீசை இல்லா முத்தழகி இருள் சூழ்ந்த பிரபஞ்சத்தின் இன்னிசை வெண்பா கலித்தொகை நூலில் குறிப்பு எழுதும் பனிப்புயல் ஈரம் கசிந்த இம்மிசை பரிபாடல் ஏங்கும் காமத்துப்பால் தீராத மெல்லினம் திகட்டாத பாவை அண்டம் முழுவதும் இவளே பெளர்ணமி மொத்தத்தில் இவள் இவ்வுலகின் மகாராணி.
- கவிஞர் சிவா

தலைப்பு: யப்பா என்ன அழகு கவிதை

நானும் பட்டாம்பூச்சி ஆனேன் அவள் முதல் முறை என்னை தீண்டிய போது தினமும் அவளோடு பயணம் செய்கிறது என் இரவுகள் அவள் தரும் உணர்வுகளை பனித்துளியாக பதித்து வருகிறது கடக்கும் பாதையில் இருண்ட நேரத்தில் அவளின் சேட்டைகள் எழுத முடியாத குறும்புதனத்தின் உச்சம் அவளிடம் மட்டும் ஏன் பரிதவிக்கிறது மனசு புரியாத புதிர் நதிக்கரையில் பூத்து குலுங்கும் பூக்களுக்கு தான் வெளிச்சம். .
- கவிஞர் சிவா

தலைப்பு: தீண்டும் கவிதை

அவள் அழகை கண்டதும் பாற்கடலை மீண்டும் கடைய ஆரம்பித்தேன் இம்முறை அவளை எனக்கு மட்டும் சொந்தம் ஆக்க
- கவிஞர் சிவா

தலைப்பு: கடைசல் கவிதை

பிறந்தவர்கள் அனைவரும் ஒருநாள் மறைவது உறுதி நான் மட்டும் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும் அவள் அழகை மீண்டும் ருசிக்க. .
- கவிஞர் சிவா

தலைப்பு: பிறப்பு கவிதை

தூரல் தீண்டிய பாகம் நித்தமும் நான் கீறல் போட வேண்டும் திசைகளில் வகை அறிந்து சுடு நீர் பீச்ச வேண்டும்
- கவிஞர் சிவா

தலைப்பு: சுடு நீர் கவிதை

மேடு பள்ளங்கள் நிறைந்த வாழ்க்கை முந்தி செல்வது முக்கியம் இல்லை அவள் முந்தானையில் முகம் பதித்து மூச்சுவிட முடியாது இறுக்கி பிடித்து அவளையும் வெற்றி எனும் பாதைக்கு இழுத்து செல்ல வேண்டும்
- கவிஞர் சிவா

தலைப்பு: வெற்றி பாதை கவிதை

Conclusion:
ஹைக்கூ கவிதைகள் எந்த விதமான மனதையும் சின்னதாய் தட்டி எழுப்பும் . இந்த பதிவு நிச்சயமாக உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நம்புகிறேன்.

@Writing Siva✍️💕💕💕💕

எங்க போறிங்க உங்கள் வரவை எதிர்பார்த்து எங்கள் வலைத்தளத்தில் பல கவிதைகள் காத்து இருக்கிறது.

உங்களுக்கு பிடித்த கவிதைகளை படியுங்கள், உங்கள் மனதை எங்கள் கவிதை வரிகள் தாலாட்டும் , சீறாட்டும் , சிந்திக்க வைக்கும்.

கவிதைக்குள் ஆயிரம் உணர்வுகள் ஒழிந்து இருக்கிறது.

எங்கள் கவிதை உங்களுக்கு எந்த உணர்வை தந்தது என்று மறக்காமல் பதிவு செய்யுங்கள்.

உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.

உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.

நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி

nagarajasivaspeech@gmail.com

அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்

நன்றி வணக்கம். .

No comments:

Powered by Blogger.